April 20, 2024

ஈரான் மீதான ஆயுதத் தடை நீட்சி ஐ.நாவில் தோல்வி!

ஈரான் மீதான உலகளாவிய ஆயுதத் தடையை நீட்டிக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமை பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பில், காலவரையறையின்றி தடையை நீட்டிப்பதற்கான தீர்மானத்திற்கு டொமினிகன் குடியரசின் ஆதரவை மட்டுமே வாஷிங்டன் பெற்றது.

பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட 15 உறுப்பினர்களைக் கொண்ட 11 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அரபு நாடுகள் வாக்களிப்பிலிருந்து வெளிநடப்புச் செய்திருந்தன.

ஈரானுக்கும் ஆறு உலக வல்லரசுகளுக்கும் இடையில் 2015 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் அக்டோபர் 18 ஆம் தேதி காலாவதியாகவிருந்த 13 ஆண்டு தடையை நீட்டிக்க ரஷ்யாவும் சீனாவும் கடுமையாக எதிர்த்தன.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ, வாக்கெடுப்பை வெளிப்படுத்தும் சபைக் கூட்டத்திற்கு முன்னதாக தீர்மானத்தின் தோல்வியை அறிவித்தார்.

„சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதில் பாதுகாப்பு கவுன்சில் தீர்க்கமாக செயல்படத் தவறியது மன்னிக்க முடியாதது“ என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.