März 28, 2024

கூட்டமைப்பின் அடுத்த கறுப்பாடு பாய தயாராம்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே குறித்த தகவலை அனுப்பியுள்ளார்.

இருப்பினும், அரசாங்கம் அதற்கு இன்னும் சாதகமான பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும் கட்சிக் குள்ளான உள் பிரிவு காரணமாக பாதி பேர் விரக்தி யடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.