März 28, 2024

அத்திவாரகுழியினுள் மனித எலும்புக்கூடு?

யாழ்.நகரின் புறநகரான கொட்டடி மீனாட்சிபுரத்தில் கட்டிடம் அமைக்க வெட்டிய குழியில் இருந்து மனித எலும்புக்கூடு மற்றும் ஆடைகள் மீட்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அகழ்வுபணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட உடைகளின் பிரகாரம் குறித்த எலும்புக்கூட்டு தொகுதி ஒரு பெண்ணினுடையதாக இருக்கலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.