April 20, 2024

சமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை

உலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு அதிபர  மகுபுலி.

சமூக முடக்கம் கிடையாது,மக்கள் வீட்டுக்குள் இருந்தால் நோய் எதிர்ப்பு திறன் 30 சதம் குறைந்து விடும்.சமூகத்தில் இயங்குவது மூலம் மக்கள் நோய் எதிர்ப்பை பெற வேண்டும்.

வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் இருப்பது கொரானாவை விட பேரழிவு ஏற்படுத்தும்.
பாரவூர்தி, பேருந்துகள் ஓடும்.
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். சுற்றுலாவுக்கு வருபவர்களை வரவேற்கிறோம்.
அண்டை நாட்டு எல்லைகளை திறந்து விட்டுள்ளேன். எல்லாரும் நுழையலாம்.
முகக்கவசம்  போடுவதால் குழப்பமும் அச்சமும் வருகிறது. மக்கள் மாஸ்க் போட தடை.
கொரானா பரிசோதனை கருவிகள் நம்பகத்தன்மை இல்லை.
கொரானா பரிசோதனை கருவிகளில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டால் கொலை வழக்கு பதியப்படும்.
ஆப்பிரிக்கா எல்லா வைரஸ்களையும் கண்டுள்ளது. அது போல்தான் இதுவும்.
கொரானா வைரசை விட ஆபத்தானது கொரானா மீதுள்ள பயம்தன் என்று அதிபர் ஜான் மகுபுலி கூறியுள்ளார்.