September 29, 2023

எவரும் துயிலுமில்லத்திற்குள் அரசியல் செய்ய அனுமதியோம்!

நாங்கள் அடிக்கடி கூறிக்கொண்டு வருகிற விடயம் என்னவென்று சொன்னால், எவரும் துயிலுமில்லத்திற்குள் வைத்து அரசியல்
செய்யக்கூடாது என்பது எனத் தெரிவித்துள்ள முல்லை ஈசன் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

சம்பவம் குறித்து அவர் கருத்துரைக்கையில்:-

இன்றைக்கு தேராவில் மாவீரர் துயிலுமில்ல இழைப்பாறும் மண்டபத்தின் வெளிப்புறத்தில் ஈபிடிபி கட்சியின் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த சரவணபவான் ஆகிய இருவருடைய சுவரொட்டிளும் ஒட்டப்பட்டுள்ளன.

இவர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றால் வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டலாம்.