April 19, 2024

முஸ்லீம்களிற்கு எதிராக இனவாதம்: ஜவர் கைது?

முஸ்லீம்களிற்கு எதிராக கோத்தா அரசிற்கு ஆதரவாக இனவாதத்தை பரப்பி வரும் தெரண ஊடகத்துறையினர் தாக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை – அத்துலக பகுதியில் நேற்று (24) ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் முஸ்லீம்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஐவரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
ரமழான் கொண்டாட்டம் தொடர்பில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
சிங்கள இனவாதிகளிற்கு ஆதரவாக இன்று ஊரடங்கை பிறப்பித்து நாட்டை முடக்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.