April 25, 2024

துயர் பகிர்தல் தன்னுயிரை கொடுத்து தமிழ்யுவதியை காப்பாற்றிய குடும்பஸ்தரின் இறுதிச்சடங்கு

தன்னுயிரை கொடுத்து தமிழ்யுவதியை காப்பாற்றிய குடும்பஸ்தரின் இறுதிச்சடங்கு

கொத்மலை நீர்த்தேக்கத்தில் தற்கொலைக்கு முயன்ற தமிழ் யுவதியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு தன்னுயிரை பறிகொடுத்த குடும்பஸ்தரின் இறுதிக்கிரியை இன்றையதினம் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது.

உயிரிழந்தவர் லிந்துல ரத்னகிரி கொலனியில் வசிக்கும் 28 வயதான ஹமீத் ரிஸ்வான் என அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இவரது இறுதிச் சடங்குகள் கிராமவாசிகளின் கண்ணீருக்கு மத்தியில் இன்றையதினம் லிந்துல பராஸ்டன் ரத்னகிரி கொலனி கல்லறையில் நடைபெற்றது.

லிந்துல பார்ம்ஸ்டன் ரத்னகிரி விஹாரையின் தலைமை விகாராதிபதி கொடிகமுவே தம்மவிமலா தேரர் பௌத்த மத சடங்குகளை நடத்தினார்.

ரிஸ்வானின் தாய் ஒரு பௌத்தர், அவரது தந்தை ஒரு முஸ்லிம்.

ரிஸ்வானின் மனைவி ஒரு கத்தோலிக்கர்.

ரிஸ்வானின் இரண்டு குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்பௌத்த தத்துவத்தைப் பின்பற்றுகிறார்கள், ரிஸ்வானின் மூத்த மகள் ஷானிகா மடுவந்தி லிந்துல சிங்கள மகா வித்யாலயாவின் 12 வயது மாணவி.

ரிஸ்வானின் மகன் லக்ஷன் மடுவந்த (11) லிந்துல சிங்கள மகா வித்யாலயத்தின் 6 ஆம் வகுப்பு மாணவர்.

தங்கள் தந்தையின் திடீர் மரணம் தங்களுக்கு சோகமான இழப்பு என்று ரிஸ்வானின் இரண்டு குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.

ரிஸ்வானின் பிரேத பரிசோதனை நுவரெலியா மருத்துவமனையில் தடயவியல் மருத்துவரால் நேற்று (22) நடத்தப்பட்டது, இது மூச்சுத் திணறல் காரணமாக ஏற்பட்ட மரணம் என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.