April 25, 2024

கட்டாரில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கையர்…!!

கட்டாரில் தொழில் செய்து வந்த சிலாபத்தைச் சேர்ந்த சுரஞ்சன் மிரெண்டா (38) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை கோர விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கட்டாரிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வந்த சுரஞ்சன் கடந்த சனிக்கிழமை நள்ளிரவே உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் தனது மனைவியுடன் தொலைபேசியில், உரையாடியுள்ளார்.

கல் உடைக்கும் இயந்திரமொன்றில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த போது அந்த இயந்திரம் மேலிருந்து கீழே விழுந்த போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

இதையடுத்து அவரது உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த நபரின் கடைசி மகனுக்கு 7 வயதே ஆகின்றது. எனினும் அவருக்கு தந்தையின் உயிரிழப்பு குறித்து எதுவும் தெரியவில்லை.

எனினும் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் அவரை நீணட காலம் பார்க்காததால் அவரது உடலை ஒருதடவையேனும் பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.