März 28, 2024

கனேடிய மத்திய அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை..!!

நாடு முழுவதிலும் உள்ள கனேடியர்களுக்குக் கோவிட்-19 தொடர்ந்தும் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில்முதற் தேசம் (First Nations), இனுயிட் (Inuit), மேட்டி (Métis) ஆகிய சமூகத்தினரும் சுகாதாரசமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறார்கள்பூர்வகுடியினருக்குகுறிப்பாக அவர்களது குடும்பங்களில் இருந்தும் சமூகங்களில் இருந்தும் பிரிந்திருப்போருக்குதனித்துவமான தேவைகள் இருப்பதைக் கனேடிய அரசு புரிந்துகொள்கிறது.

பூர்வகுடிச் சமூகங்களின் உடனடித் தேவைகளை நிறைவு செய்வதற்கும்கோவிட்-19 இன் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கும் புதிதாகத் தகுதி அடிப்படையிலான 305 மில்லியன் டொலர் பூர்வகுடி சமூக உதவி நிதியம் ஒன்றை அமைப்பதாகக் கனேடிய அரசு மார்ச் 18 ஆந் திகதி அறிவித்ததுநகர்ப்புறங்களிலும்பூர்வகுடிக் குடியிருப்புக்களுக்கு வெளியேயும் வசிக்கும் பூர்வகுடி மக்களுக்குச் சேவையாற்றும் பூர்வகுடி அமைப்புக்களுக்கென இந்தப் பணத்தில் 15 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டது.

நகர்ப்புறங்களிலும்பூர்வகுடிக் குடியிருப்புக்களுக்கு வெளியேயும் வசிக்கும் பூர்வகுடி மக்களுக்குச் சேவையாற்றும் பூர்வகுடி அமைப்புக்களுக்கு மேலதிகமாக 75 மில்லியன் டொலர் வழங்கப்படுவதாகப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று அறிவித்தார்.

இந்த மேலதிக நிதிஉணவுப் பாதுகாப்புமனநல ஆதரவுச் சேவைகள்தூய்மைப்படுத்தல் மற்றும் பாதுகாப்புக் கருவிகள் போன்ற பூர்வகுடி மக்களின் இன்றியமையாத தேவைகளை நிறைவு செய்வதற்கு அதிக சமூக அடிப்படையிலான திட்டங்களுக்கு உதவியளிக்கும்மூத்தோர்போக்குவரத்துபூர்வகுடிச் சிறுவர்களுக்கும் இளையோருக்குமான கல்விக் கருவிகள் போன்ற ஏனைய தேவைகளுக்கும் இந்தப் பணம் உதவும்இந்தத் திட்டங்களுக்கான பணத்தை வழங்கும் செயற்பாடு எதிர்வரும் வாரங்களில் ஆரம்பமாகும்.