März 29, 2024

கோத்தாவின் வெள்ளை வான்:திரும்ப வரும்?

கோத்தாபாயவினது வெள்ளை வான் கடத்தல்களை அம்பலப்படுத்தியதற்காக சிறை சென்றுள்ள ராஜிதவை விடுவிக்க கோரியே களுத்துறை பாலத்திற்கு மேல் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வெள்ளை வேன் கடத்தல் பற்றி பேசிய ராஜித கைது செய்யப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே போராட்டம் பற்றி கருத்து வெளியிட்டுள்ள மனோகணேசன் ராஜித பொய் சொன்னார். ஆகவே அவருக்காக போராடாதீர்கள் என சிலர் எனக்கு இங்கே அறிவுரை கூற முயல்கிறார்கள்.
இங்கே தாடி, மீசை, முதலை என்பவை அல்ல எனது கேள்வி. வெள்ளை வேன் கடத்தல் நிகழ்ந்ததா, இல்லையா என்பதே கேள்வி என் கேள்வி.
கடத்தல்கள் நிகழ்ந்தன என்பதும், அதில் கடத்தப்பட்ட பெரும்பாலோர் தமிழர் என்பதும் என்னைவிட எவருக்கும் தெரியாது.
இங்கே தாடி, மீசை, முதலை கதை, சொல்லியவர், வந்தவர், போனவர் இதெல்லாம் பொய்யோ, உண்மையோ, இவை முக்கியமில்லை.
உண்மையில் வெள்ளை வேன் கடத்தல்கள் நடக்கவே இல்லை என்று இவர்கள் சொல்லும் பொய்களுக்கு முன் இதுவெல்லாம் ஒன்றுமே இல்லை.
இப்படி ஆளைக்கடத்தி விட்டு ஒன்றுமே நடக்கவில்லை என சாதிப்பவர்களுக்கு, அது அன்று நடந்தது என உறுதிபட சொல்ல இது ஒரு அரங்கம். அதை ராஜித ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அதை பயன்படுத்தி வெள்ளை கடத்தல்கள் நிகழ்ந்தன என்பதை மீண்டும் ஞாபகப்படுத்தி வெளிக்கொணர வேண்டும்.
இல்லா விட்டால் மீண்டும் எதிர்காலத்தில் வெள்ளை வேனை கொண்டு வந்து இவர்கள் கூச்சமில்லாமல் நிறுத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.