März 29, 2024

யாழ்.பல்கலையில் நினைவேந்தல்!

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 2 ஆம் நாளான இன்று சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 2 ஆம் நாள் அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று இரவு 7 மணிக்கு உயிர்நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வு இடம்பெற இடத்திற்கு யாழ்ப்பாண காவல்துறையினர் வருகைதந்து நினைவேந்தல் நிகழ்வினை நடாத்திய மாணவர்களின் பெயர் விபரங்கள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.