März 27, 2024

ஜேர்மனியில் றோ புலனாய்வாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஜேர்மனியின் எசனில் சீக்கிய சமூக மையத்தின் உறுப்பினர் ஏப்ரல் 21, 2016 அன்று சாப்பிடும் காட்சி

ஜேர்மனியில் றோ உளவு அமைப்புக்காக உளவு பார்த்த இந்தியர் ஒருவருக்கு எதிராக ஜேர்மனியின் அரச சட்டவாளர் வழக்குத் தொடுத்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சீக்கியர் சமூகத்தையும், காஷ்மீர் ஆதரவாளர்கள் மீது குறித்த இந்தியர் உளவு பார்த்துள்ளார்.

பால்வீர் எஸ் என்ற சந்தேச நபருக்கு எதிராக இன்று புதன்கிழமை பிரான்ங்போர்ட்ட நகரில் உள்ள மாநில நீதிமன்றில் அரச சட்டவாளரால் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

சீக்கியர்கள் மற்றும் காஷ்மீர் இயக்கம் மற்றும் அவர்களது உறவினர்கள் பற்றிய தகவல்களை இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவான றோ அமைப்புக்கு 2015 ஜனவரியில் அல்லது அதற்கு முன்னர் அனுப்ப ஒப்புக்கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஜேர்மனியை தளமாகக் கொண்ட உளவுத்துறை அதிகாரியுடன் வழக்கமான தொலைபேசி மற்றும் தனிப்பட்ட தொடர்பில் இருந்தார். டிசம்பர் 2017 வரை தகவல்களை அனுப்பியிருந்தார்.

குறித்த சந்தேசநகர் கைது செய்யப்பட்டோ அல்லது காவலில் வைக்கப்பட்டோ இருக்கிறார் என்பதை சட்டவாளர் தெரிவிக்கவில்லை.

பிராங்பேர்ட்டில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பணிபுரிந்த றோ அதிகாரிக்கு வழங்கினார் என்று நகரத்தின் உயர் பிராந்திய நீதிமன்றத்திற்கு தெரிவித்து இந்த வார தொடக்கத்தில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

சந்தேக நபருக்கு எதிரான விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த பிராங்போர்ட் நீதிமன்றம் கடந்த டிசம்பரில் இதே சமூகங்களை உளவு பார்த்ததற்காக ஒரு இந்திய தம்பதியினரை தண்டணை வழங்கிது.

வெளிநாட்டு உளவுத்துறை முகவராக செயல்பட்டதற்காக கணவருக்கு 18 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைத்தண்டனையும். அவருக்கு உதவி செய்ததற்காக அவரது மனைவிக்கு 180 நாட்கள் ஊதியமும் தண்டணையாக விதிக்கப்பட்டது.

1989 முதல் இச் சமூகங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர் என்பது நினைவூட்டத்தக்கது.