April 18, 2024

துயர் பகிர்தல் ஜோதிஷபூஷணம்“ சிவஸ்ரீ ஷண்முகரத்ன. இராதாகிருஷ்ணக் குருக்கள் @ ராதா ஐயா

MIH சர்வதேச நிறுவனத்தின் „ஆலோசகருக்கு“ கண்ணீர் அஞ்சலி
கொழும்பு,மருதானை கப்பித்தாவத்த ஸ்ரீ பாலசெல்வ விநாயகர் கோவில் பிரதம குரு „ஜோதிஷபூஷணம்“ சிவஸ்ரீ ஷண்முகரத்ன. இராதாகிருஷ்ணக் குருக்கள் @ ராதா ஐயா
அவர்கள் 10/05/2020-அன்று அதிகாலை இறைபதம் எய்திய துயரச் செய்தி அறிந்தேன்.ஹம் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயத்திற்கு பலதடவை மகோற்சவ குருவாக வந்து பெறாமகன் பிரம்மசிறீ ராஜ்குமார் சர்மாவுடன் இணைந்து அன்புடன் நிறைவேற்றி பல அடியா. ர்களின் துயர்துடைக்கும் ஜோதிட த்தையும் பார்த்து ஆலோசனை வழங்கி மனங்களில் நிலைநின்ற பெரியார் இன்று எல்லோருக்கும் கவலை அளித்துவிட்டு சிவனது பொற்பாதம் சென்று விட்டார் ஐயாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.