März 28, 2024

யாழில் நடைமுறைகளை இறுக்கினார் மகேசன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் சில நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (06) யாழ் வணிகர் கழதினருக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் பொதுப் போக்குவரத்து மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருபவர்கள் எதிர்நோக்கும் பாஸ் நடைமுறை தொடர்பாக ஆராயும் கூட்டம் இடம்பெற்றது.

கூட்டத்தின் முடிவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத் தொற்று ஏற்படாதவண்ணம் சில நடைமுறைகளை பின்பற்ற உத்தேசித்துள்ளோம் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.