März 28, 2024

நேற்று தொற்றியோருக்கு இன்று இல்லையாம்?

கொழும்பில் பண்டாரநாயக்கபுர மற்றும் கொலன்னாவையை சேர்ந்த இருவர் மற்றும் தேசிய வைத்தியாசாலை தாதி ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை என்று இன்று (6) பரிசோதனை முடிவு கிடைத்துள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இரண்டாம் கட்டமாக செய்யப்பட்ட பரிசோதனை முடிவில் அவர்களுக்கு தொற்று இல்லை (Negative) என்ற பெறுபேறு கிடைத்துள்ளது.

எனினும் நேற்று அவர்களுக்கு செய்யப்பட்ட முதலாம் கட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளது (Positive) உறுதி என்ற பெறுபேறு கிடைத்திருந்தது.

இதனால் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிலையில் இந்த இரு பரிசோதனை முடிவுகளும் இப்போது குழப்பத்தை உண்பண்ணியிருக்கின்றது.