April 20, 2024

தீயில் கருகிய இளம் குடும்பஸ்தர்

மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் பிரிவின் பேத்தாழையில் மயானத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ளது.

பேத்தாழையயைச் சேர்ந்த ச.புஸ்பகுமார் வயது (-22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபர் குடும்பத்தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறுவதாகவும் பின்னர் மனைவியின் பொலிஸ் முறைப்பாட்டின்படி சமதானப்படுத்தும் செயற்பாடு இடம்பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

குறித்த நபர் தீ மூட்டி எரிந்து கொண்டிருப்பதனை அவதானித்த பொதுமக்கள் கல்குடா பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தினை மீட்டுள்ளனர்.