April 24, 2024

கொரோனா வைரஸை அழிக்க சுடு நீரே மிகச் சிறந்த தீர்வாகும் – குணமடைந்த ஒரு நோயாளி!

 

இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணம.டைந்த நோயாளி தான் காப்பாற்றப்பட்ட விதம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது சுடு நீர் மாத்திரமே அதிகமாக வழங்கப்பட்டதென கொரோனாவில் குணமடைந்த முதல் இலங்கையர் தெரிவித்துள்ளார்.

தனக்குத் தினமும் 6 – 7 லீட்டர் சூடு நீர் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மருத்துவர் ஒருவர் அனுபவத்தின் வாயிலாகத் தான் கண்ட ஓர் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றிற்கு உள்ளானவர்கள், அதனை ஆரம்பத்திலேயே தவிர்க்க முடியும் எனத் தெரிவித்த அவர், இதற்கு சுடுநீரே சிறந்த மருந்து எனவும், இதனை நீராவியாக உள் இழுப்பதுவும் கொரோனாவை அழிக்க ஏதுவாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, சூடான பால் தினமும் அருந்துவதும் இதற்கு நல்ல பலன் அளிக்கும் எனவும் தெரிவித்தார்.