April 20, 2024

பிரான்சின் நகரபிதா ஜேர்மனி வைத்தியசாலையில் சாவு!!

email sharing button
sms sharing button
messenger sharing button
whatsapp sharing button
print sharing button
skype sharing button
கொரோனாத் தொற்றினால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் Haut-Rhin மகாணத்தின் Saint-Louis நகரத்தின் நகரபிதா Jean-Marie Zoellé கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் சாவடைந்துள்ளார். மிகவும் உயிராபத்தான நிலையில் ஜேர்மனியின் பொன் (BONN) நகர வைத்தியசாலையில் சாவடைந்துள்ளார்.
COVID-19 தொற்றின் தீவிரத்தால் முலூசிலுள்ள St. Petru வைத்தியசாலையின் அவசரசகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 28ம் திகதி மார்ச் மாதம், ஜேர்மனிக்கு இடம் மாற்றப்பட்டிருந்தார்.
இவரின் சாவினை சுவிற்சர்லாந்தின் எல்லைப்பகுதியிலுள்ள Saint-Louis நகரசபை பெரும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது. இவரிற்கான மரியாதை வணக்க நிகழ்வு, நாட்டு நிலைமை சீரடைந்த பின்னர் மாநகரசபையில் நடாத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.