März 29, 2024

துயர் பகிர்தல் நமசிவாயம் தங்கமுத்து

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் தங்கமுத்து அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னபிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கலாராணி மற்றும் பரமேஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, வேலுப்பிள்ளை மற்றும் சிவசோதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருஸ்ணமலர் அவர்களின் அன்பு மாமியாரும்,

கஜனன், சர்மி, யசிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, அமராவதி மற்றும் தேவசகாயம்(பிரான்ஸ்), கனகசபாபதி, காலஞ்சென்றவர்களான மனோன்மணி, தனலக்சுமி, மகாதேவன் மற்றும் தனபாலசிங்கம்(கனடா), காலஞ்சென்ற சீதாலக்சுமி மற்றும் கமலம்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துரைசாமி கண்மணி தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, நல்லையா, மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற சற்குணதேவி மற்றும் ஆறுமுகம்(பிரான்ஸ்), பாலசிங்ம்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகன், மருமகள், சகோதரி

தொடர்புகளுக்கு

பரமேஸ்வரன் – மகன்

ஜெயலெட்சுமி – பெறாமகள்

கௌரி – பெறாமகள்