März 29, 2024

வலிகாமம் பகுதியில் ஊரடங்கு சட்டத்தின் போது நடமாடியவர்களை இராணுவம் விரட்டியடித்து

வலிகாமம் வடக்கு பகுதியில் ஊரடங்கு சட்டத்தின் போது தேவையற்ற விதத்தில் நடமாடியவர்களை இராணுவம் விரட்டியடித்து வீடுகளுக்குச் செல்ல வைத்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.குறிப்பாக அந்த பகுதிகளில் ஒன்றுகூடி கரம்போட் மற்றும் காட்ஸ் விளையாடியவர்களே இவ்வாறு இராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதா ரண நிலையை அடுத்த யாழ்ப்பாணத்தில் மறு அறி வித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத் தில் வெளியே நடமாடுவோர் மீது கடுமையான சட்ட நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றன.

எனினும் இளைஞர்கள் தமது பொழு தைக் கழிக்க, ஆலயங்கள். சன சமூக நிலையங்கள், பூட்டிய கடைகளுக்கு முன்பாக, மற்றும் வீடுகளில் ஒன்று கூடி கரம் போட், காட்ஸ் போன்ற
விளையாட்டுக்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்று கூட வேண்டாம் என்று அறிவித்திருந்தபோதும்,

யாழ்ப் பாணத்தில், இவ்வாறு ஒன்று கூடி விளையாட்டுக்களில் ஈடுபட்ட இளை ஞர்களையே பொலிஸார் துரத்தித் துரத்தி அடித்துள்ளனர்.பாதுகாப்பு பிரிவினர் யாழ்ப்பாணத்திலுள்ள சிறிய ஒழுங்கைகள், வீதிகளுக் குள் மோட்டார் சைக்கிளில் சென்று இவ்வாறு விரட்டியடிப்பில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தெல்லிப் பழை. குட்டிய புலம் , வசாவிளான், பலாலி போன்ற கிராம பகுதிகளில் இவ்வாறான விளையாட்டுக்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீதே பிரம்படி விழுந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, விக்கெட் மற்றும் பிரம்புகளுடன் பொலிஸார், படையினர் ரோந்துப் பணிகளிலும் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது