April 19, 2024

யாழில் சமுர்த்தி பெண் உத்தியோகத்தரின் அடாவடி! கண்ணீர் விட்டழும் பயனாளிகள்!! (வீடியோ)

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கிராம மக்களுக்கு கொரோனா கடன் கொடுப்பனவாக 5000 ரூபா வழங்குவதில் பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் பழிவாங்குவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சமுர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யுமாறு மூன்று மாதத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட தரப்பு கடிதம் எழுதியுள்ளது. இதன் எதிரொலியாகவே தாம் பழிவாங்கப்படுவதாகவும் இது குறித்து சமுர்த்தி முகாமையாளரிடமும் பிரதேச செயலருக்கும் முறையிட்ட போதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்ட நாளிலிருந்து தாம் எந்தவித வருமானமும் இன்றி இருப்பதாகவும்இ பலர் உணவின்றி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் பிரதேச செயலரிடம் தொடர்பு கேட்ட போதுஇ தமக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடித்திற்கு தன்னால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அவரை பலமுறை தொடர்பு கொண்ட போதிலும் பதில் கிடைக்வில்லை.

பிரதி பிரதேச செயலரை தொடர்பு கொண்டு கேட்டபோது பிரதேச செயலர் வெளியில் சென்றுள்ளதாக கூறியிருந்தார். அத்துடன் அரை மணித்தியாலத்தின் பின் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்திருந்ததுடன் இந்த இடர் காலத்தில் இவ்வாறு வழங்காது நிறுத்த முடியாது என்றும் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.