துயர் பகிர்தல் திருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா


யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Castel Goffredo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பரூபன் ஜெயலலிதா அவர்கள் 27-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கொடிகாமம் ஆத்தியடி ஒழுங்கை கச்சாய் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா வேலுப்பிள்ளை, இராமுப்பிள்ளை பரமேஸ்வரி(இத்தாலி) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், மீசாலை வடக்கைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் சிவஞானறஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலாயுதம்பிள்ளை புவனேஸ்வரி(சுவிஸ்) தம்பதிகளின் பெறாமகளும்,
புஸ்பரூபன்(ரூபன்- இத்தாலி) அவர்களின் அன்பு மனைவியும்,
சுபீஜன், விபீஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயசோதி(இலங்கை), ஜெயமனோகரா(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயமகேஸ்வரா(பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை), ஜெயமதீஸ்வரா(சுவிஸ்), ஜெயமனோகரி(இலங்கை), ஜெயசங்கர்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பலதா(இத்தாலி), காலஞ்சென்ற மதனகாவலர், புஸ்பமோகன், புஸ்பமாலா(ஜெர்மனி), பாலசிங்கம், பத்மலோஜினி(சுவிஸ்), விஜயராணி(சுவிஸ்), சிறீதரன்(சுவிஸ்), துவாரகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திலகரட்ணம்(பாலன்- இத்தாலி), குணசீலன்(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
செந்தூரி செந்தாரகன், பகீரதன், சாலினி, தர்ணியா, சஞ்சயா, ஜந்துஜன், பிரிந்தயன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
மதுஷன், மாதினி, கெளசிக், அபிநயா, அபிஷாந், கஜந்தினி, கேஷாயினி, ஜலவன், மிதிலவன், தமிழகன், திராவிடன், ஜெதுஷன், ஜெதுஷனா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 28 Nov 2018 02:00 PM – 06:00 PM
- Thursday, 29 Nov 2018 09:00 AM – 10:00 AM