யாழ் மணியந்தோட்டத்தில் பொலிஸார் மீது திடீர் தாக்குதல்…….!!

யாழ். மணியந்தோட்டம் பகுதியில் நடமாடும் பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த சிலரே பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த முச்சக்கரவண்டியை இடைமறித்து விசாரித்த வேளையிலேயே பொலிஸார் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், இதன்போது படுகாயமடைந்த ஒரு பொலிஸ் அதிகாரி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு பொலிஸாரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.