மார்க்சிசம், கொம்னியுசம் தொடங்கி மக்களுக்கான கருத்தியல் அனைத்தையும் இன அழிப்பு பின்புலத்தில் வைத்து கேள்விக்குட்படுத்துகிறது.
உலக ஒழுங்கு மற்றும் சர்வதேச உறவுகள் என்ற நவீன அரசுகளின் பூகோள அரசியலை ஒரு புறமாகவும் போராடி விடுதலையடைந்த நாடுகளின் கருத்தாங்கங்களையும் அதன்வழி உருவான தத்துவங்களையும் மறுபுறமாகவும் வைத்து ‘நந்திக்கடல்’ பல கேள்விகளை உற்பத்தி செய்வதுடன் இவை தொடர்பான ஒரு மறு விசாரணையையும் கோருகிறது.
இதுவே ‘பிரபாகரனியம்’ என்னும் நவீன விடுதலைக் கோட்பாடாக நம் முன் விரிகிறது.